இலங்கை
தமிழரசு கட்சி தலைமைத்துவ இழுபறிக்கு சிறிதரனே காரணம்! சாணக்கியன் சாடல்

தமிழரசு கட்சி தலைமைத்துவ இழுபறிக்கு சிறிதரனே காரணம்! சாணக்கியன் சாடல்
தமிழரசு கட்சி தலைமைத்துவ இழுபறிக்கு சிறிதரனே காரணம் என தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மட்டுப்படுத்தப்பட்ட கட்சியாக தமிழரசுக் கட்சியை முடக்குவதற்கும் பலவீனப்படுத்துவதற்கும் முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ். குடாவில் மட்டுப்படுத்தப்பட்ட கட்சியாக தமிழரசுக் கட்சியை விமர்சிப்பதை மட்டுமே கொள்கையாகக் கொண்டு, வடக்கு-கிழக்கு மக்களின் தேசிய பிரச்சினைகளை பேச இயலாமல் உள்ளதாகவும், தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை