இலங்கை
வடக்கில் 70 மேற்பட்ட பாடசாலைகள் மூடப்படும் அபாயம்!

வடக்கில் 70 மேற்பட்ட பாடசாலைகள் மூடப்படும் அபாயம்!
கல்விப் பின்புலம் என்பது யாழ்ப்பா
ணத்துக்கு தனித்துவமான கலாசாரத்தை
கொண்ட விடயமாகும். தனித்துவமான
கலாசாரத்தை கொண்ட விடயமாக இருந்த
போதும் இன்று கல்வி பாரிய சவாலுக்கு
உட்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல்
மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராம
லிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் 982 பாடசாலைகள்
காணப்படும் நிலையில் அவற்றில் 70 இற்கும்
மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்
தெரிவித்தார்.
கல்விச் சீர்திருத்தம் தொடர்பான தேசிய
வேலைத்திட்டத்தின் எட்டாவது அமர்வு
பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி
அமரசூரிய தலைமையில் நேற்று முன்தினம்
சனிக்கிழமை வடக்கு மாகாண பிரதம செய
லாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடை
பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்
றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
“கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் ஜனா
திபதி அநுரகுமார திஸநாயக்க பாராளுமன்
றத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கல்வி
மறுசீரமைப்பு ஏன் தேவை என்பது
தொடர்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
அதில் கல்வியின் நிலைமை, பாடசாலை
யின் நிலைமை, அவற்றின் மூலம் ஏற்பட
வுள்ள மாற்றம் என்ன என்பது தொடர்
பாகவும் குறிப்பிட்டு கல்வி சீர்திருத்தம்
முக்கிய தேவையனெ தெளிவாக வலியு
றுத்தியிருந்தார்.
அதுபோலவே எமது அரசாங்கத்தின்
நோக்கமும் அதுவாகவே இருக்கிறது. கிளீன்
சிறீலங்கா வேலைத்திட்டம், வறுமை ஒழிப்பு
வேலைத்திட்டம், நாட்டை டிஜிற்றல்
மயமாக்கல் போன்ற பிரதான வேலைத்
திட்டங்களை கொண்டுள்ளது.
அதில் வறுமை ஒழிப்பு தொடர்பான
வேலைத்திட்டத்துக்கு கூடுதலான முன்னு
ரிமை வழங்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு
மாகாணம் தொடர்பில் விசேட கவனம்
செலுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் ஆளுநர் மற்றும் உலக வங்கி
பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரை
யாடலில் வட மாகாணத்தை விசேடமாக
கவனத்தில் கொண்டனர்.
வட மாகாணமே
இலங்கையில் அதிக வறுமைக்கு உட்பட்ட
பிரதேசமாக இருக்கிறது.
இலங்கையில் வறுமையான மாவட்டமாக
மொனராகலை மாவட்டம் இருந்த நிலையில்
தற்போது அது முல்லைத்தீவு மாவட்டமாக
மாறியிருக்கிறது.
இதனால் வறுமையுடன் இணைத்து கல்வி
தொடர்பான பிரச்சினையையும் அணுக
வேண்டியுள்ளது. வறுமையிருக்கும் இடங்கள
லெல்லாம் கல்வி பிரச்னையும் காணப்படு
கிறது. கல்வியில் பின்னடைவை சந்தித்துள்ள
இடங்களில் வறுமை அதிகரித்துள்ளது.
மேலும் சமூக சீரழிவுகள், குற்றசெயல்கள்
அதிகரித்து காணப்படுகிறது. இன்று யாழ்
மாவட்டத்திலும் இந்த சவால்கள் காணப்படு
கிறது. இந்த சவால்களில் இருந்து மீண்டு
புதிய யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்ப
வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்
கிறது.
இதனால் எமது அரசாங்கத்தில் கல்விக்கே
அதிக முன்னுரிமை வழங்கப்பட வேண்டு
மென்ற கொள்கை பின்பற்றப்படுகின்றது.
இதற்கமைவாகவே கல்விப் புலத்தை வெளிப்
படுத்தி கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு
கல்வி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை வட மாகாணத்தில் 982
பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற
றில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட
வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
10 பிள்ளைகள் கல்வி கற்கும் 35 பாட
சாலைகள் காணப்படுவதாகவும் 11 – 20
பிள்ளைகள் கல்வி கற்கும் 64 பாடசாலை
களும் 20 – 50 பிள்ளைகள் கற்கும் 171 பாட
சாலைகள் இருப்பதாகவும் 50 – 100 பிள்ளை
கள் கற்கும் 174 பாடசாலைகள் இருப்பதாக
வும் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 40 க்கும் மேற்பட்ட பாடசாலைகள்
எவ்வித கல்வி நடவடிக்கைகளும் முன்னெ
டுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள
தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் எமது கல்வியில் மறுசீரமைப்பு
தேவை என்பது உணரப்படுகின்றது. இது
தொடர்பில் அனைவரும் புரிதலுடன் செயற்
பட்டால் சமூகத்துக்கு நல்ல செய்தியை
கொண்டு செல்லமுடியுமென எதிர்பார்க்கி
றேன்” – என்றார்
லங்கா4 (Lanka4)
அனுசரணை