Connect with us

இலங்கை

கடன் தொல்லை; 3 மகள்களை கொன்று தந்தையும் உயிர் மாய்ப்பு

Published

on

Loading

கடன் தொல்லை; 3 மகள்களை கொன்று தந்தையும் உயிர் மாய்ப்பு

  தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் 3 மகள்களை கொன்று தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வீடு கட்ட வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் மகள்களை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

Advertisement

சம்பவத்தில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கோவிந்தராஜ் (36) என்பவர் தனது மகள்களான பிரக்திஷா ஸ்ரீ (9), ரித்திகா ஸ்ரீ (7), தேவஸ்ரீ (3) ஆகியோரை கழுத்தறுத்து கொன்று விட்டு, தானும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதாக  இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்ததாக கூறப்படும் நிலையில், உயிரிழந்தவரின் மனைவி பாரதியிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன