இலங்கை
கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் மாயம்!

கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் மாயம்!
யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
40 மற்றும் 50 வயதுடைய இருவர் நேற்றையதினம் கடற்றொழிலுக்கு படகு ஒன்றில் சென்றுள்ளனர். இவ்வாறு தொழிலுக்கு சென்ற இருவரும் இதுவரை திரும்பி வரவில்லை.
காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகளில் மீனவர்களும் கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.