இலங்கை
அத்துமீறிய மீன்பிடி; 4 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

அத்துமீறிய மீன்பிடி; 4 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர் காவற்றுறை நீதிவான் நீதிமன்றப் பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் நான்கு இந்தியாவின் தமிழக மீனவர்கள் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை அதிகாலை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.