Connect with us

இலங்கை

ஆகஸ்ட்டில் நிகழப்போகும் பேரழிவு ; அதிர்ச்சி கொடுக்கும் பாபா வங்காவின் அடுத்த கணிப்பு

Published

on

Loading

ஆகஸ்ட்டில் நிகழப்போகும் பேரழிவு ; அதிர்ச்சி கொடுக்கும் பாபா வங்காவின் அடுத்த கணிப்பு

பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட பாபா வங்காவின் கணிப்புகள் இன்றும் சர்வதேச ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், 2025 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் நடக்கப்போகும் மர்மமான, ஆபத்தான நிகழ்வுகள் குறித்து அவர் கூறியுள்ள தகவல்கள் உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.

Advertisement

அவரது ஆகஸ்ட் மாத கணிப்பின்படி, “வானத்திலும் பூமியிலும் ஒரே நேரத்தில் இரட்டை நெருப்பு” எழும் என கூறியுள்ளார்.

இதன் அர்த்தம் தெளிவாக இல்லாவிட்டாலும் இது எரிமலை வெடிப்பு, காட்டுத்தீ, அல்லது விண்கல் தாக்கம் போன்றவற்றை குறிக்கலாம் என கருதப்படுகின்றது. சிலர் இதை இயற்கை பேரழிவுகளுக்கு முன் எச்சரிக்கையாக பார்க்கிறார்கள்.

மேலும், ஆகஸ்ட் மாதத்தில் மனிதர்கள் அறிய விரும்பாத ஒன்றை உணர வாய்ப்பு இருப்பதாகவும், அது ஒரு “மூடியது மீண்டும் திறக்க முடியாத” வகையான விடயமாக இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

Advertisement

இது செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம் அல்லது வேற்றுகிரகவாசிகள் பற்றிய விடயமாக இருக்கலாம் என்று பலர் கருதுகின்றனர்.

அதே நேரத்தில், பாபா வங்கா “ஒன்றுபட்ட கை இரண்டாக உடைக்கப்படும்” என கூறியுள்ளார். இது நேட்டோ (NATO) அல்லது ஐரோப்பிய ஒன்றியம் (EU) போன்ற அமைப்புகளில் உடைப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சிலர் நம்புகின்றனர்.

அத்துடன், இயற்கை பேரழிவுகள் அதிகரிக்கும், ஐரோப்பாவில் மக்கள் தொகை குறையும். 2025 இல் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

Advertisement

இது தற்போது உலகில் பரவலாக பேசப்படும் விடயமாக உள்ளது.

உலகம் நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்வது என்ற சூழலில், பாபா வங்காவின் வர்ணனைகள் பலருக்கு ஒரு எச்சரிக்கையாகவே தெரிகின்றன.

இந்த வகையில், அவர் கூறிய ஆகஸ்ட் மாத இரட்டை நெருப்பு கணிப்பு பலரும் கவனிக்க வேண்டிய முக்கியமான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன