இலங்கை
இரண்டு குழந்தைகளின் தாயை கொடூரமாக கொன்று புதைத்த பேஸ்புக் காதலன்

இரண்டு குழந்தைகளின் தாயை கொடூரமாக கொன்று புதைத்த பேஸ்புக் காதலன்
இந்தியாவின் கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம், ஹொசகோப்பலு கிராமத்தைச் சேர்ந்த 38 வயது ப்ரீத்தி என்ற இரண்டு குழந்தைகளின் தாய், ஆன்லைனில் பழகிய ஒரு வாரத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளியான புனித், கே.ஆர்.பேட்டை தாலுகாவில் உள்ள கரோதி கிராமத்தைச் சேர்ந்தவர். ப்ரீத்தியின் கணவர் சுந்தரேஷ் ஆட்டோ ஓட்டுநராகவும், ப்ரீத்தி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தவராகவும் இருந்தார்.
ப்ரீத்தி புனித்துக்கு பேஸ்புக்கில் நண்பர் கோரிக்கை அனுப்பினார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு ப்ரீத்தி புனித்திடம் காதல் தெரிவித்து, நேரில் சந்திக்க அழைத்தார்.
ப்ரீத்தி, தனது நண்பரின் மகளின் சடங்கில் கலந்து கொள்வதாக வீட்டில் கூறிவிட்டு, இருவரும் ஒரு லாட்ஜில் தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர். புனித்துடன் மீண்டும் நேரம் செலவிட ப்ரீத்தி விரும்பினார், புனித் மறுத்ததால் இருவருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இருவரும் வீடு திரும்பும் போது புனித் அவளை கட்டரகட்டா காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையில் முரண்பாடு உச்சமடைய கல்லால் அடித்து ப்ரீத்தியை கொலை செய்து பின்னர், உடலை தனது விவசாய நிலத்தில் கொண்டு சென்று, தென்னை ஓலையால் மறைத்து வைத்தார்.
ப்ரீத்தி வீடு திரும்பாததால், அவரது கணவர் சுந்தரேஷ் ஹாசன் எக்ஸ்டென்ஷன் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
ப்ரீத்தியின் தொலைபேசி கே.ஆர்.பேட்டை பகுதியில் செயல்பட்டதை கண்டறிந்த பொலிஸார், புனித்தை தொடர்பு கொண்டபோது, அவர் ப்ரீத்தி தனது காரில் தொலைபேசியை விட்டுவிட்டு பேருந்தில் சென்றதாக கூறினார்.
இதற்கிடையில், கரோதி கிராமவாசிகள் ஒரு பெண்ணின் உடல் கிடைத்ததாக தகவல் அளித்தனர்.
விசாரணையில், அது ப்ரீத்தி என்று உறுதியானது. புனித் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுவதாக தெரிவித்தார்.