இலங்கை
கொழும்பில் திடீரென தீப்பிடித்த முச்சக்கரவண்டி

கொழும்பில் திடீரென தீப்பிடித்த முச்சக்கரவண்டி
கொழும்பு பொரளை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீபிடித்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து இன்று பு (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.