Connect with us

இலங்கை

செம்மணி சான்றுப்பொருள்களை 200 பேர் வரையானோர் பார்வை; அடையாளம் காட்டப்படவில்லை

Published

on

Loading

செம்மணி சான்றுப்பொருள்களை 200 பேர் வரையானோர் பார்வை; அடையாளம் காட்டப்படவில்லை

செம்மணி மனிதப்புதை குழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்றுப்பொருள்களை சுமார் 200 பேர் வரையானவர்கள் பார்வையிட்டுள்ளனர். எனினும், எவரும் எதையும் அடையாளம் காட்டவில்லை.

செம்மணிப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட புத்தகப்பை, சிறுவர்களின் காலணிகள், குழந்தையின் பாலூட்டும் போத்தல் (போச்சி), வளையல்கள் உள்ளிட்ட 54 சான்றுப்பொருள்கள் மக்களின் பார்வைக்காக நேற்று மாலை வைக்கப்பட்டன.

Advertisement

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கொலை விசாரணைப் பிரிவால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்துக்கு அமைய, என்புக்கூடுகளாக மீட்கப்பட்டவர்களை அடையாளம் காணும் விதமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 200 பேர் சான்றுப்பொருள்களைப் பார்வையிட்டபோதிலும், எவரும் எதையும் அடையாளம் காட்டவில்லை.

 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன