Connect with us

இலங்கை

நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

Published

on

Loading

நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

வைத்தியர்களின் இடமாற்றங்களை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமல் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 11 ஆம் திகதித காலை 8.00 மணிக்குள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அவர் கூறினார்.

Advertisement

“இடமாற்றப் பட்டியல் பிரச்சினைகளில் சுகாதார அமைச்சு முறையாகத் தலையிடவில்லை என்றால், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுவாக, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணக் கோரி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

சுகாதார அமைச்சுக்கு நாங்கள் ஒரு காலக்கெடுவை வழங்கியுள்ளோம். நாங்கள் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளோம்.
ஆனால் இந்த அதிகாரிகள் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள்.
ஏதேனும் காரணத்தால் 11 ஆம் திகதி காலை 8.00 மணிக்குள் இது தொடர்பாக சுகாதார அமைச்சு நேர்மறையான தலையீட்டைச் செய்யத் தயாராக இல்லை என்றால், அதன்படி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.” என்றார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1754500710.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன