இலங்கை
முப்படையிலிருந்து தப்பியோடிய 3,504 பேர் கைது!!

முப்படையிலிருந்து தப்பியோடிய 3,504 பேர் கைது!!
கடந்த பெப்ரவரி மாதம் 22 முதல் ஓகஸ்ட் 3 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3 ஆயிரத்து 504 முப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் 2,937 இராணுவ சிப்பாய்கள், 289 கடற்படையினர், மற்றும் 278 விமானப்படையினர் உள்ளடங்குகின்றனர் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.