இலங்கை
அழகு சாதனப் பொருட்கள் தொடர்பில் இலங்கையர்களுக்கு வந்த எச்சரிக்கை!

அழகு சாதனப் பொருட்கள் தொடர்பில் இலங்கையர்களுக்கு வந்த எச்சரிக்கை!
இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்படும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் பொது மக்களுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
49 வகையான அழகுசாதன பொருட்கள் பயன்படுத்த பொருத்தமற்ற அளவில் கன உலோகங்கள் இருப்பதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, சரும வெண்மையாக்கல் பொருட்களில் இப்பிரச்சினை அதிகம் என பணிப்பாளர் சமந்தா கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
பொருத்தமற்ற அழகுசாதன பொருட்கள் ஒன்லைனில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை