Connect with us

இந்தியா

இந்திய விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

Published

on

Loading

இந்திய விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

பயங்கரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை அளித்த தகவல்களுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 02 வரை பயங்கரவாதிகள் அல்லது சமூக விரோத சக்திகளிடமிருந்து சாத்தியமான அச்சுறுத்தல்கள் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக இந்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Advertisement

அதன்படி, இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்புப் படையினரை அதிக எச்சரிக்கையுடன் வைக்க இந்திய சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, விமான நிலையங்கள், விமான ஓடுபாதைகள், ஹெலிகாப்டர் தரையிறங்கும் தளங்கள், பறக்கும் பள்ளிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பாதுகாப்பை பலப்படுத்த இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன