இலங்கை
கிளிநொச்சியில் அதிகளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு!

கிளிநொச்சியில் அதிகளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு!
கிளிநொச்சி புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயம் அருகாமையில் இன்றையதினம் காலை 9 மணியளவில் கிளிநொச்சி பொலிஸாரால் அதிகளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
கிளிநொச்சி புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயம் அருகாமையில் இன்றையதினம் காலை சந்தேகத்திற்கிதமாக தோட்டாக்கள் அதிகளவு சிதறி காணப்பட்டதுடன் அதனை அவதானித்த பாடசாலை சமூகம் உடனடியாக கிளிநொச்சி பொலிசார் மற்றும் இராணுவத்தினருக்கு அறிவித்துள்ளனர்
அதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட இடத்திற்கு வருகை தந்த பொலிசார் இராணுவம் சிதறி காணப்பட்ட தோட்டாக்களை மீட்கும் பணியினை பாதுகாப்பான முறையில் மேற்கொண்டுள்ளனர்.
தொடர்ந்து 11மணியளவில் 150ற்கு மேற்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டதுடன் இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்