Connect with us

இலங்கை

நாமலுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றின் உத்தரவு

Published

on

Loading

நாமலுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றின் உத்தரவு

  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ மற்றும் பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் , ஜனவரி 29ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மீண்டும் விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியபோது சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் ரூ.15 மில்லியனை என்.ஆர் கன்சல்டன்சி (பிரைவேட்) லிமிடெட் (NR Consultancy (Pvt) Ltd) என்ற நிறுவனத்தில் முதலீடு செய்ததாக நாமல் ராஜபக்க்ஷ குழுவினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Advertisement

அது தொடர்பிலான மனு இன்று (07) கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது நாமல் ராஜபக்‌ஷவும் சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

இந்த விசாரணை தொடர்பான சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இன்னும் பெறப்படவில்லை என்று குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

Advertisement

அதன்படி, ஜனவரி 29ஆம் திகதி புகாரை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் தொடர்பாக நினைவூட்டல்களை அனுப்பவும்   உத்தரவிட்டுள்ளார்.    

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன