இலங்கை
பாதுகாப்புப் பிரதியமைச்சர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை; எதிர்க்கட்சிகள் நடவடிக்கை

பாதுகாப்புப் பிரதியமைச்சர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை; எதிர்க்கட்சிகள் நடவடிக்கை
பாதுகாப்புப் பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
இதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக்கட்சி, சர்வஜன அதிகாரம் உள்ளிட்ட எதிரணிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றில் இதுதொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் சுதந்திரமாக இடம்பெறவேண்டுமானால் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் பதவி விலக வேண்டும் என எதிரணிகள் வலியுறுத்தின. எனினும், அவர் பதவி விலகவில்லை. இந்நிலையிலேயே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் நடந்தபோது அருண ஜயசேகர, கிழக்கு மாகாணக் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.