Connect with us

இந்தியா

புதின் இந்த ஆண்டு இந்தியா வருகை; தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை

Published

on

Putin x

Loading

புதின் இந்த ஆண்டு இந்தியா வருகை; தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை

Vladimir Putin Visit To India: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், இன்டர்பாக்ஸ் செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வியாழக்கிழமை மாஸ்கோவில் கூறியதாக இன்டர்பாக்ஸ் தெரிவித்துள்ளது. புதின் வருகைக்கான தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.ஆங்கிலத்தில் படிக்க:தற்போது, இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் தோவல் மாஸ்கோவில் இருக்கிறார்.2022-ல் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மோதல் தொடங்கிய பிறகு புதின் இந்தியாவுக்கு வரும் முதல் வருகை இதுவாகும்.கடந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் புதினும் இரண்டு முறை சந்தித்தனர். ஜூலை மாதம் நடந்த 22-வது இந்தியா-ரஷ்யா உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக மோடி மாஸ்கோ சென்றார். இது மோடி தனது மூன்றாவது பதவிக்காலத்தை தொடங்கிய பிறகு மேற்கொண்ட முதல் இருதரப்பு பயணமாகும்.அந்தப் பயணத்தின் போது, இந்தியா – ரஷ்யா உறவுகளை வலுப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், ரஷ்யாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான ‘ஆர்டர் ஆஃப் செயிண்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர்’ அவருக்கு வழங்கப்பட்டது.பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி ரஷ்யாவின் கசான் நகருக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டபோது, இரு தலைவர்களும் அக்டோபரில் மீண்டும் சந்தித்தனர்.இந்த வருகை, ரஷ்யாவுடனான இந்தியாவின் தொடர்ச்சியான வர்த்தகம் தொடர்பாக டெல்லி மற்றும் வாஷிங்டனுக்கு இடையே வர்த்தக முட்டுக்கட்டை நிலவும் நேரத்தில் நடைபெறுகிறது. புதன்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு புதிய நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்தியாவின் தொடர்ச்சியான ரஷ்ய எண்ணெய் கொள்முதலைக் காரணம் காட்டி, இந்திய இறக்குமதிகளுக்கு கூடுதலாக 25 சதவீத வரியை விதித்தார். இதன் மூலம் மொத்த வரி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது உலகில் மிக உயர்ந்ததாகும். உக்ரைனில் போரை நிறுத்துவதற்கு மாஸ்கோ ஒப்புக்கொள்ளாவிட்டால், ரஷ்ய எண்ணெயை வாங்குபவர்கள் இரண்டாம் நிலை தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்த போர் இப்போது நான்காவது ஆண்டில் நுழைகிறது, மேலும் இந்த எச்சரிக்கை வெள்ளிக்கிழமை வரை உள்ளது.இதற்கிடையில், அதிபர் புடின் வரும் நாட்களில் டிரம்ப்பைச் சந்திப்பார் என்று கிரெம்ளின் அறிவித்தது. இரு தரப்பினரும் ஏற்பாடுகளை இறுதி செய்து வருவதாகவும், ஒரு இடம் ஒப்புக்கொள்ளப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ரஷ்ய வெளியுறவு விவகார ஆலோசகர் யூரி உஷாகோவ் உறுதிப்படுத்தினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன