இலங்கை
மகள் காதலனுடன் சென்றதால் தாய் விபரீத முடிவு; யாழில் துயரம் சம்பவம்

மகள் காதலனுடன் சென்றதால் தாய் விபரீத முடிவு; யாழில் துயரம் சம்பவம்
மகள் காதலனுடன் தலைமறைவான விரக்தியில் பெண் ஒருவர் நஞ்சருந்தி மரணமடைந்துள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் வங்கி ஒன்றில் துப்பரவுப் பணியாளராக வேலை செய்யும் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த தாயார் வங்கி அலுவலக வளாகத்தில் நஞ்சருந்தி மரணமானதாக தெரியவருகின்றது.
பெண்ணின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கபபட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.