இலங்கை
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5,307 பேர் கைது!

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5,307 பேர் கைது!
நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5,307 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 20 பேரும், சந்தேகத்தின் பேரில் 676 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 216 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 459 பேரும், மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 86 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 22 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 3,828 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.