இலங்கை
கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு 18 லட்சம் பெறுமதியான கருவிகள் வழங்கி வைப்பு!
கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு 18 லட்சம் பெறுமதியான கருவிகள் வழங்கி வைப்பு!
கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்கு 18 லட்சம் பெறுமதியான இரத்த அழுத்த பாவையிடும் கருவியும் இதைய துடிப்பை கண்டறியும் கருவிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
செந்தில்குமரன் அறக்கட்டளை நிறுவனத்தால் 18 லட்சம் பெறுமதியான உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இரத்த அழுத்த பாவையிடும் கருவி, இதைய துடிப்பை கண்டறியும் கருவி மற்றும் மடிக்கணினி உள்ளிட்ட கருவிகள் மாவட்ட மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் பிரபாத்திடம் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பொது மாவட்ட மருத்துவமனையின் பிரதிப்பணிப்பாளர் தயாழினி, இதய மருத்துவ நிபுணர் த.ஜெயகாந், வைத்திய அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
