Connect with us

இலங்கை

தமிழர் பகுதியொன்றில் 30 பேர் கைது ; சோதனையில் சிக்கிய பொருட்கள்

Published

on

Loading

தமிழர் பகுதியொன்றில் 30 பேர் கைது ; சோதனையில் சிக்கிய பொருட்கள்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் சுமார் 95,000 மில்லி லீற்றர் கசிப்பு போதைப் பொருட்களுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்டட்பட்ட ஆரையம்பதி, தாளங்குடா, புதுக்குடியிருப்பு ,கிரான்குளம், நாவற்குடா, கல்லடி ஆகிய பிரதேசங்களில் பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 95,000 மில்லி லீற்றர் கசிப்பு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர்கள் இன்று (26) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன