Connect with us

இலங்கை

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதிகள்; 13 பேர் கைது

Published

on

Loading

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதிகள்; 13 பேர் கைது

  பிலியந்தலை – போகுந்தர பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 11 பெண்கள் உட்பட 13 பேர் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று (25) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் மசாஜ் நிலையங்களின் உரிமையாளர்கள் இருவரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மசாஜ் நிலையங்களின் உரிமையாளர்கள் இருவரும் நுவரெலியா டிக்கோயா மற்றும் மாத்தறை தெனியாய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30 மற்றும் 32 வயதுடையவர்கள் ஆவர்.

Advertisement

கைதான 11 பெண்களும் கண்டி குண்டசாலை, போகல்ஆர, மொரபிட்டிய, நேபட, தெனியாய, மஹியங்கனை, அநுராதபுரம், போகஹவெவ, ஜா-எல , புத்தளம், இராஜகிரிய மற்றும் கட்டியாவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட 13 சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன