Connect with us

இலங்கை

ஒன்லைன் மூலம் 45,000 ரூபா மோசடி – இளைஞன் கைது!

Published

on

Loading

ஒன்லைன் மூலம் 45,000 ரூபா மோசடி – இளைஞன் கைது!

ஒன்லைன் மூலம்  45000  ரூபா பெறுமதியான பொருளை  கொள்வனவு  செய்து  பண மோசடியில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாார்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்  பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.   

Advertisement

ஒன்லைன் மூலம்  கொள்வனவு  செய்த  பொருளை பெற்றுக்கொண்டு அதற்குரிய பணம் வழங்காது இளைஞன் தப்பி ஓடியதாக  கடந்த புதன்கிழமை (20)  முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய   சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிகாட்டலில் செயற்பட்ட  பல்வேறு முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரி எம்.எச்.எம்.ஹசீப் தலைமையிலான பொலிஸார்   விசாரணைகளை மேற்கொண்டு  சம்மாந்துறை 01 பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனை கைது செய்தனர்.

இதன் போது கைதான  இளைஞனிடம் இருந்து ஒன்லைன்   மூலம்  கொள்வனவு  செய்யப்பட்ட  பொருள்   மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் உள்ளிட்ட சான்றுப்பொருள்கள்   நேற்று (22) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் சட்டநடவடிக்கைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன