இலங்கை
களுவாஞ்சிகுடியில் துவிச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!
களுவாஞ்சிகுடியில் துவிச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் மாங்காட்டில் துவிச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் துவிச்சக்கர வண்டியிலும் பயணித்தவரும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்னர்.
இது தொடர்பிலான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
