Connect with us

இலங்கை

கிழக்கு சுகாதாரத்துறைக்கு மில்லியன் கணக்கான நிதி ஒதுக்கீடு!

Published

on

Loading

கிழக்கு சுகாதாரத்துறைக்கு மில்லியன் கணக்கான நிதி ஒதுக்கீடு!

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் (14) கிழக்கு மாகாண  ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில், கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத் துறை, சமூக சேவைகள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்புத் துறைகளின் மேம்பாட்டிற்காக சுகாதார அமைச்சின் நிறுவனங்களால் மட்டும் 3,371.05 மில்லியன் ரூபா அரச  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நிதியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

Advertisement

மாகாண சுகாதார சேவைகள் துறை, சுதேச ஆயுர்வேத மருத்துவத் துறை, சமூக சேவைகள் துறை, நன்னடத்தை மற்றும் சிறுவர்கள்கள் பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் திட்ட முன்னேற்ற மதிப்பாய்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து திட்டங்களையும் முடிக்குமாறு ஆளுநர் நிறுவனத் தலைவர்களுக்கு இதன் போது அறிவுறுத்தினார்.

நிகழ்வில் மாகாண  சுகாதார அமைச்சின் செயலாளர்,திணைக்கள தலைவர்கள் மற்றும் துறை சார்  நிறுவனங்களின் தலைவர்கள் என பலரும் பங்கு பற்றினர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன