Connect with us

இலங்கை

சம்மாந்துறையில் கைக்குண்டு மீட்பு!

Published

on

Loading

சம்மாந்துறையில் கைக்குண்டு மீட்பு!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் வெடிக்காத நிலையில் புதிய கைக்குண்டு ஒன்றினை சிறுவர்கள்  கண்டுபிடித்துள்ளனர்.

இச்சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் உள்ள அம்பாறை – கல்முனை பிரதான வீதிக்கு அருகில் உள்ள குட்டை ஒன்றில் இன்று  முற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது   மீட்கப்பட்ட   கைக்குண்டை செயலிழக்கச் செய்ய  விசேட அதிரடி படையினரால்  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் குறித்த  குண்டை கண்டுபிடித்தவர்கள் 119 எனும் பொலிஸ் அவசர பிரிவுக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் கைக்குண்டுடை பார்வையிட்டனர்

மீட்கப்பட்ட கைக்குண்டை அவ்விடத்தில் இருந்து அகற்றி செயலிழக்கம் செய்வதற்காக இன்று  சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற கட்டளையை பெற்று  மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன