Connect with us

இலங்கை

பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் படுகாயம்!

Published

on

Loading

பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் படுகாயம்!

நானுஓயா-பெரகும்புர வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (19) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

பெரகும்புர பகுதியில் இருந்து நானுஓயா நோக்கி சென்று கொண்டிருந்த இ.போ.ச பேருந்தும் நானுஓயாவிலிருந்து பெரகும்புர நோக்கி எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் எடின்புரோ தோட்ட முகாமையாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

இ.போ.ச பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன நானுஓயா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டு மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன