Connect with us

இலங்கை

மட்டக்களப்பில் பெருந்தொகையான போதைப்பொருள் மீட்ப்பு!

Published

on

Loading

மட்டக்களப்பில் பெருந்தொகையான போதைப்பொருள் மீட்ப்பு!

மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிந்தவூரைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 3 பேரை 20 இலச்சம் ரூபா பெறுமதியான ஒரு கிலோ கேரளா கஞ்சா, 50 கிராம் ஜஸ் போதை பொருள் 25 கிராம் ஹரோயின் போதை பொருட்களுடன் கைது செய்துள்ளதாக காவல் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எம். பிரியந்த பண்டார தெரிவித்தார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (09) இடம்பெற்றுள்ளது.

Advertisement

காவல்துறையினருக்க கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் உட்பட 3 பேர் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவர்களை சுற்றிவளைத்து கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து ஒரு கிலோ கேரளா கஞ்சா, 50 கிராம் ஜஸ் போதை பொருள் 25 கிராம் ஹரோயின் போதை பொருட்களை மீட்டனர்.

இதில் மட்டு கருவப்பங்கேணியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவர், அம்பாறை சாய்ந்த மருதைச் சேர்ந்த 34 வயதுடைய மற்றும் நிந்தவூரைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஆகியோரை கைது செய்ததுடன் கைது செய்யப்பட்ட நிந்தவூரைச் சேர்ந்த பெண்ணின் கணவர் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் அவருடன் சிறையில் இருந்த கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த போதை பொருள் வியாபரியான இளைஞனுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும்.

Advertisement

குறித்த இளைஞன் சிறையில் இருந்து நீதிமன்ற பிணையில் அண்மையில் வெளிவந்து நிந்தவூரைச் சேர்ந்த பெண்ணுடனும் சாய்ந்தமருதைச் சேர்ந்த இளைஞனுடன் சேர்ந்து இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன