இலங்கை
மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு!
மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு!
மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியின் சவுக்குத் தோட்டத்திலிருந்து இளைஞர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை பிரதேச வாசிகளால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலம் மீட்கப்பட்ட இடத்தின் அருகில் இருந்து குறித்த இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிள் அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதனையடுத்து மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றி மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட போது, சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் செங்கலடி பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞரின் மரணம் கொலையா? தற்கொலையா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
