Connect with us

இலங்கை

மன்னார் மருத்துவமனையில் உயிரை மாய்த்துக்கொண்ட யாழ்.இளைஞன்!

Published

on

Loading

மன்னார் மருத்துவமனையில் உயிரை மாய்த்துக்கொண்ட யாழ்.இளைஞன்!

மன்னார்  – மருத்துவமனை வளாகத்தில் இளைஞரொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று (11) காலை தூக்கில் தொங்கியவாறு அவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Advertisement

மன்னார், மருத்துவமனையில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

இளைஞனின் இந்த விபரீத முடிவுக்கு என்ன காரணம் என்பது தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை.

அத்துடன் குறித்த இளைஞன் நேற்றையதினம் (10) இரவு இவ்வாறு தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்று குறிப்பிடப்படுகின்றது.

Advertisement

இந்தநிலையில் குறித்த இளைஞனின் சடலம் நீதிபதியின் பார்வைக்காக வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன