Connect with us

இலங்கை

வெலிக்கடை சிறைச்சாலை காணி ரணிலுக்கு சொந்தமானது ; வஜிர அபேவர்தன

Published

on

Loading

வெலிக்கடை சிறைச்சாலை காணி ரணிலுக்கு சொந்தமானது ; வஜிர அபேவர்தன

விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவை அழைத்துச் சென்ற வெலிக்கடை சிறைச்சாலை அமைந்திருக்கும் காணியின் அசல் உரிமையாளர்கள், ரணில் விக்கிரமசிங்கவும் அவரது குடும்பத்தினரும் ஆவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, ஊடகங்களுக்கு இன்று (27) தெரிவித்தார்.

அந்த உண்மையை நிரூபிக்கும் ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக வஜிர அபேவர்தன கூறியுள்ளார்.

Advertisement

“ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்ட பிறகு, அவர் தனது குடும்பத்திற்குச் சொந்தமான அதாவது அவரது பாட்டிக்குச் சொந்தமான 43 ஏக்கரை கொண்ட வெலிக்கடை நிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலத்தின் அசல் உரிமையாளர்கள் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது குடும்பத்தினர் ஆவார். அதுவும் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவமாகும்” என்றார்.

“வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள நிலத்தின் அனைத்து நிலப் பதிவுகளும் என்னிடம் உள்ளன. அத்தகைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் இதை எதிர்கொள்ள வேண்டியது மிகவும் சோகமான நடத்தை என்று சொல்ல வேண்டும்,” என்றும் அபேவர்தன கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன