Connect with us

இலங்கை

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி – சந்தேகநபர் கைது!

Published

on

Loading

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி – சந்தேகநபர் கைது!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் தாரேகுளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு 15 ஐச் சேர்ந்த 41 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

Advertisement

குறித்த சந்தேகநபர்  கொரியாவில் வேலைகளை வாங்கித் தருவதாகக் கூறி 150 பேரிடம் இருந்து சுமார் 15 கோடிக்கும்  அதிகமாக மோசடி செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து ஒரு ஜீப் வண்டி , ஒரு காணிக்கான வழக்கறிஞர் உரிமம் மற்றும் இரண்டு கையடக்கத்தொலைபேசிகள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இந்த சம்பவம் குறித்து கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன