Connect with us

இலங்கை

எறும்புண்ணியின் இறைச்சியுடன் சிக்கிய நபர்

Published

on

Loading

எறும்புண்ணியின் இறைச்சியுடன் சிக்கிய நபர்

  கேகாலை, கித்துல்கல பிரதேசத்தில் எறும்புண்ணியின் இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கடந்த 23 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Advertisement

இதன்போது சந்தேக நபரிடமிருந்து ஒரு கிலோ எறும்புண்ணியின் இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவருக்கு எதிராக 40 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன