Connect with us

இலங்கை

கல்முனையில் கோர விபத்து – மாநகர சபை காவலாளி பலி!

Published

on

Loading

கல்முனையில் கோர விபத்து – மாநகர சபை காவலாளி பலி!

கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மருதமுனையில் இடம்பெற்ற விபத்தில் கடமை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த கல்முனை மாநகர சபை காவலாளி உயிரிழந்துள்ளார். 

நேற்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

Advertisement

கல்முனை மாநகர சபையில் காவலாளியாக கடமை புரிந்த பாஸ்கரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

கடமை முடிந்து பெரியநீலாவணையில் உள்ள தனது வீடு நோக்கி செல்கையிலே அவர் விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார்.

Advertisement

சடலம் கல்முனை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன