Connect with us

இலங்கை

பேருந்துகளில் பணம் செலுத்த விரைவில் டிஜிட்டல் அட்டை!

Published

on

Loading

பேருந்துகளில் பணம் செலுத்த விரைவில் டிஜிட்டல் அட்டை!

பேருந்துகளில் பணம் செலுத்துவதற்குத் தேவையான டிஜிட்டல் அட்டையை ஒரு வருடத்திற்குள் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். 

Advertisement

அதன்படி, ஏற்கனவே கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பாக பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அத்தகைய டிஜிட்டல் அட்டை இல்லாததால் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் வருமான இழப்பு ஏற்படும். 

இதனால் இலங்கை போக்குவரத்து சபையால் தினசரி இழக்கப்படும் வருமானம் ஒரு கோடி ரூபாயை நெருங்கும் என்றும் அவர் கூறினார்.

Advertisement

கிராமங்களுக்குப் போக்குவரத்தைக் கொண்டு வரும் நோக்கில் மாவட்ட அளவில் 15 பல்நோக்கு போக்குவரத்து முனையங்கள் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கண்டி பல்நோக்கு போக்குவரத்து மையமும் 2027 செப்டம்பரில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இதன்போது தெரிவித்திருந்தார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன