இலங்கை
மட்டக்களப்பில் வாவியில் மூழ்கி ஒருவர் பலி!
மட்டக்களப்பில் வாவியில் மூழ்கி ஒருவர் பலி!
மட்டக்களப்பில் வாவியில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதார்.
குறித்த சம்பவம் நேற்று (28) மட்டக்களப்பு வாவியின் மண்முனைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கோவில் குளம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய கறுவல்தம்பி தங்கவேல் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மீன் பிடிப்பதற்காக ஆற்றில் இறங்கிய குறித்த நபர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்குள் தவறுதலாக சென்றதால் அதிலிருந்து மீளமுடியாமல் காணாமல் போயுள்ளார்.
இதையடுத்து, உறவினர்களும் பொதுமக்களும் மற்றும் காவல்துறையினரும் இணைந்து தேடுதலில் ஈடுபட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்துக்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் மணிகரன் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
