Connect with us

இலங்கை

மறைவிடத்தில் இருந்து வெளிப்பட்டார் ராஜித சேனாரத்ன

Published

on

Loading

மறைவிடத்தில் இருந்து வெளிப்பட்டார் ராஜித சேனாரத்ன

  பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சற்றுமுன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையை அடுத்து, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 60(1) இன் கீழ் ‘பிரகடனம்’ வெளியிட்டு, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க கடந்த 20 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்திருந்தார்.

Advertisement

இந்நிலையில் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திருத்தி ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட திருத்த மனுவை விசாரிக்க, கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (28) தீர்மானித்தது.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்ட இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அழைப்பாணை விடுக்குமாறு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன