இலங்கை
யாழ்.நகர்ப் பகுதியில் சடலமொன்று மீட்பு!
யாழ்.நகர்ப் பகுதியில் சடலமொன்று மீட்பு!
யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை ரமேஷ் (வயது-35) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். தொழில் நிமித்தம் யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் தங்கியிருந்த அவர், நேற்றுமுன்தினம் உறக்கத்துக்குச் சென்ற நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.
