Connect with us

இலங்கை

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் யாழ் செம்மணி ; சிசுவை கட்டியணைத்தவாறு மற்றுமொரு எலும்பு கூட்டு தொகுதி

Published

on

Loading

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் யாழ் செம்மணி ; சிசுவை கட்டியணைத்தவாறு மற்றுமொரு எலும்பு கூட்டு தொகுதி

ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு , ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதனை முற்றாக அகழ்ந்து எடுத்த பின்னர் , சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே குறித்த எலும்பு கூடுகள் தொடர்பில் உறுதியாக கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதேவேளை , இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சிறியவர்கள் மற்றும் சிசுக்களின் எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகிறது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் வெள்ளிக்கிழமை வரையில் கட்டம் கட்டமாக 46 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 174 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள அதேவேளை இதுவரையில் 187 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன