Connect with us

இலங்கை

நாய் மீது மோதி மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் பலி!

Published

on

Loading

நாய் மீது மோதி மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் பலி!

ஹக்மன – வலஸ்முல்ல வீதியில் நதுவல சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (29) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த நாய் ஒன்று மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வலஸ்முல்ல மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மீஎல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடையவர் ஆவர்.

Advertisement

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வலஸ்முல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன