இலங்கை
ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்க முன்வந்த மூவரும் மருத்துவர்கள்!
ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்க முன்வந்த மூவரும் மருத்துவர்கள்!
முன்னாள் ஜனாதிபதியும் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்க முன்வந்த மூவரும் மருத்துவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 26 ஆம் திகதி, கோட்டை நீதிவான் நீதிமன்றம் தலா 500,000 ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் ரணிலை விடுவித்தது.
இதன்போது மூன்று மருத்துவர்கள் பிணை வழங்க முன் வந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சார்பாக இந்த மூன்று மருத்துவர்களும் விருப்பத்துடன் பிணையில் கையெழுத்திட்டனர்.
மேலும் இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தனவால் ஒருங்கிணைக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
