Connect with us

இலங்கை

தேசிய வைத்தியசாலையின் பல ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு

Published

on

Loading

தேசிய வைத்தியசாலையின் பல ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு

கண்டி தேசிய வைத்தியசாலைக்கு சொந்தமான 58 ஏக்கர் நிலத்தில், 28 ஏக்கர் நிலம் அனுமதியற்ற குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பெர்னாண்டோ வௌிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலங்களில் கட்டிடங்கள் நிர்மாணிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதன் காரணமாக வைத்தியசாலையின் செயல்பாடுகளை பராமரிப்பதில் கடுமையான சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

இலங்கையின் இரண்டாவது பெரிய தேசிய வைத்தியசாலையான கண்டி தேசிய வைத்தியசாலை, போதனா வைத்தியசாலை என்றும் அழைக்கப்படுகிறது.

இது 80 வார்டுகள், 11 தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் பிற சிகிச்சை பிரிவுகளைக் கொண்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் நாளாந்தம் சிகிச்சைப் பெறும் இந்த வைத்தியசாலையை மேலும் மேம்படுத்த இந்த ஆக்கிரமிப்புகள் தடையாக உள்ளது.

Advertisement

வைத்தியசாலைக்கு சொந்தமான நிலங்களில் மக்கள் சட்டவிரோதமாகக் குடியேறியதே இதற்குக் காரணமாகும்.

வைத்தியசாலைக்குச் சொந்தமான நிலங்களில் வீடுகள், கடைகள் மற்றும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதுடன், இதுபோன்ற கட்டுமானங்கள் இன்னும் கட்டப்பட்டு வருகின்றன.

இத்தகைய சூழ்நிலையில், வைத்தியசாலை செயல்பாடுகளை பராமரிப்பதில் கடுமையான சிரமங்கள் எழுந்துள்ளன.

Advertisement

அத்துடன் கண்டி தேசிய வைத்தியசாலைக்குச் செல்லும் வீதியில் கடைகள், மலர்சாலைகளாலும், மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் விளைவாக, மிகவும் மோசமாக நோய்வாய்ப்பட்ட ஒரு நோயாளியை விரைவாக வைத்தியசாலையில் அனுமதிப்பதிலும் சிக்கல் நிலைகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன