இலங்கை
யாழில் குடும்பஸ்தர் திடீரென உயிரிழப்பு!
யாழில் குடும்பஸ்தர் திடீரென உயிரிழப்பு!
யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (30) இடம்பெற்றுள்ளது.
வட்டுக்கோட்டை – கலட்டி பகுதியைச் சேர்ந்த நடராசா ஜெயக்குமார் (வயது 45) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் நேற்று காலை உடல் சுகயீனம் காரணமாக படுத்திருந்தார்.
இந்நிலையில் அவர் அசைவற்று காணப்பட்டதால் குடும்பத்தினர் அவரை வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை வட்டுக் கோட்டை காவல்துறையினர் நெறிப்படுத்தினர்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
