Connect with us

பொழுதுபோக்கு

ரஜினிக்காக வாட்ச்மேன் வேலை பார்த்த கேப்டன்; நடிகர் சங்க தலைவர் இப்படி செய்வாரா? பிரபலம் சொன்ன முக்கிய தகவல்!

Published

on

vijayakanth rajinikanth

Loading

ரஜினிக்காக வாட்ச்மேன் வேலை பார்த்த கேப்டன்; நடிகர் சங்க தலைவர் இப்படி செய்வாரா? பிரபலம் சொன்ன முக்கிய தகவல்!

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் இடையே இருந்த நட்பு குறித்தும், விஜயகாந்தின் மனிதநேயம் குறித்தும் மீண்டும் பேசத் தொடங்கியிருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது நடந்த ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு குறித்து பைட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் லஷி விலாக்ஸ் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், பிரபல ஸ்டண்ட் கலைஞருமான ஜாகுவார் தங்கம், மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் பெருந்தன்மை குறித்து ஒரு நெகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்துள்ளார். ஒரு காலத்தில் நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த், தன் சக நடிகரான ரஜினிகாந்திற்காக செய்த தியாகம் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும், அவரைப் பார்க்கப் பெரும் கூட்டம் அலைமோதியது. காவல்துறையினரால் கூட கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இந்தத் தகவல் அறிந்ததும், கேப்டன் விஜயகாந்த் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்.அங்கு ஏற்பட்டிருந்த குழப்பத்தைப் பார்த்த விஜயகாந்த், நிலைமையைப் புரிந்துகொண்டு கூட்டத்தினரிடம் அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டார். பின்னர், ஒரு காவலர் கூட செய்யத் தயங்கும் ஒரு செயலை அவர் செய்தார். தனது புகழையும், செல்வாக்கையும் பொருட்படுத்தாமல், மருத்துவமனையின் நுழைவுவாயிலில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து, ஒரு பாதுகாவலர் போல செயல்பட்டு, கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார்.நடிகர் விஜயகாந்தின் இந்தச் செயல், ரஜினிகாந்தின் உள்ளத்தைத் தொட்டது. இந்தச் சம்பவம் குறித்து ரஜினிகாந்த் ஒருமுறை பேசும்போது, விஜயகாந்தின் இந்த உதவிக்காக அவரை “கடவுள் போன்றவர்” என்று புகழ்ந்ததாகவும் ஜாகுவார் தங்கம் கூறினார். போட்டி நடிகராக இருந்தும், ஒரு நெருக்கடியான சூழலில் தன் சக நடிகருக்குக் காவலராகச் செயல்பட்ட விஜயகாந்தின் இந்த செயல், அவரது தன்னலமற்ற அன்பையும், எளிமையையும், மனிதநேயத்தையும் எடுத்துரைப்பதாக அமைந்தது. இந்தச் சம்பவம், திரையுலகில் அரிதாகக் காணப்படும் உண்மையான நட்பு மற்றும் பெருந்தன்மைக்கு ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது. போட்டி நடிகராக இருந்தும், தன் சுயநலத்தைப் பார்க்காமல், இன்னொருவருக்காகக் களத்தில் இறங்கி, ஒரு காவலரைப் போலச் செயல்பட்ட விஜயகாந்த்தின் இந்த மனிதநேய செயல், அவரது எளிமைக்கும், உண்மையான நட்புக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றும் பேசப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன