இலங்கை
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களுக்கு இன்றுமுதல் கட்டாயமாகும் நடைமுறை!
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களுக்கு இன்றுமுதல் கட்டாயமாகும் நடைமுறை!
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது இன்று (01.09) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட முடிவுக்கு மாறாக செயல்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.
இருப்பினும், சீட் பெல்ட் இல்லாத சில வாகனங்களுக்கு சீட் பெல்ட் பொருத்த மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் மஞ்சுள குலரத்ன மேலும் தெரிவித்தார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
