Connect with us

இலங்கை

அறுகம்பே விருந்தகமொன்றின் தம்பதியினரை தாக்கிய இஸ்ரேலிய பிரஜைகள்

Published

on

Loading

அறுகம்பே விருந்தகமொன்றின் தம்பதியினரை தாக்கிய இஸ்ரேலிய பிரஜைகள்

அறுகம்பே விருந்தகமொன்றின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இஸ்ரேலிய பிரஜைகள் இருவர் பொத்துவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குப் பின்னர் காயமடைந்ததாக கூறப்படும் தம்பதியினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement

கைதான சந்தேக நபர்கள் இருவரும் 26 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

விருந்தகத்தன் உரிமையாளரும் அவரது மனைவியும் தங்கள் வாகனத்தில் பயணித்தபோது இரண்டு இஸ்ரேலியர்களும் வீதியை வழிமறித்துள்ளனர். இதனால், கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன்பின்னரே, இஸ்ரேலிய பிரஜைகள் இருவரும் அந்த தம்பதியினரை தாக்கியுள்ளனர் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.    

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன