Connect with us

இலங்கை

குற்றவியல் கும்பல்களை கூண்டோடு ஒழிப்போம்; பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்!

Published

on

Loading

குற்றவியல் கும்பல்களை கூண்டோடு ஒழிப்போம்; பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்!

நாடு முழுவதும் ஊடுருவியுள்ள குற்றவியல் வலையமைப்புகளை தீர்க்கமாக அகற்றவேண்டிய நேரம் நெருங்கியுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தக் கும்பல்கள் பல ஆண்டுகளாகத் தங்கள் எல்லையை விரிவுபடுத்தியது மட்டுமல்லாமல், சில அரசியல் நபர்களின் மறைமுக ஒப்புதல் மற்றும் வெளிப்படையான ஆதரவு காரணமாகப் பெரும்பாலும் தண்டனையின்றிச் செயற்பட்டுவந்தனர். பெயர்களைக் குறிப்பிடாமல். கிராமப்புற மற்றும் நகர்ப் புறங்களில் இத்தகைய குழுக்கள் செழிக்க அனுமதித்த அரசியல் ஆதரவின் கலாசாரத்தை நாம் ஒழிப்போம்.

Advertisement

இந்தச் சூழல்தான் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தின் ஆழமாக வேரூன்றிய அமைப்பை உருவாக்கியது. இது பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை வேட்டையாடி, முறையான நிர்வாகத்தைத் தடுக்கிறது.

இந்தப் புற்றுநோய் மேலும் பரவுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. யாரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை பொதுமக்களுக்கு உறுதியளிப்பதற்கும் இது ஒரு முக்கியமான தருணம் – என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன