Connect with us

இலங்கை

பேருந்து கட்டண மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Published

on

Loading

பேருந்து கட்டண மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எரிபொருள் விலைகள் நள்ளிரவு முதல் குறைக்கப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு   உறுதிப்படுத்தியுள்ளது.

புதிய எரிபொருள் விலைகள் நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Advertisement

அதன்படி, 289 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் புதிய விலை 283 ரூபாவாகவும்,325 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 313 ரூபாவாகவும், 305 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை  299 ரூபாவாகவும் குறைக்கப்பட்டது.

ஆனால், ஒக்டேன் 95 ரக பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. 

எவ்வாறிருப்பினும், பஸ் கட்டணம் குறைக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன