இலங்கை
வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி மூவர் உயிரிழப்பு!
வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி மூவர் உயிரிழப்பு!
இலங்கையில் வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி பெண் ஒருவர் உட்பட மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
மொனராகலை – செவனகலை பகுதியில் காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செவனகலை பகுதியைச் சேர்ந்த 24 நபரே உயிரிழந்துள்ளார்.
புத்தளம்-நவகத்தேகம பகுதியில் காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
மேலும் பொலனறுவை- மெதிரிகிரி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய பெண் காட்டு யானை தாக்கி இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.[ஒ]
