இலங்கை
கணேமுல்ல சஞ்சீவ கொலை ; வெளியான காணொளியால் அதிர்ச்சி
கணேமுல்ல சஞ்சீவ கொலை ; வெளியான காணொளியால் அதிர்ச்சி
புதுக்கடை நீதிமன்றில் வைத்து கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் போது,குறித்த துப்பாக்கியைக் கொண்டுசெல்லப் பயன்படுத்தப்பட்ட முறையைக் காட்டும் புதிய காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.
சட்டத்தரணி போல் உடையணிந்த நபரொருவர் எடுத்துச் சென்ற வெற்று சட்டப் புத்தகத்திற்குள் ஆயுதம் எவ்வாறு கவனமாக மறைத்து வைக்கப்பட்டது என்பதை இந்தக் காட்சிகள் வெளிப்படுத்துகின்றன.
கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி புதுக்கடை நீதிமன்றில் வைத்து கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
